கோவை தெற்கு தொகுதியில் நியாய விலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். 



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, நியாய விலை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், விற்பனை முனைய இயந்திரத்தில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருள்களின் விவரங்கள், கடைகளில் தற்போது உள்ள இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். 



மேலும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கு பொருள்கள் வழங்கப்படுவதை கண்ட அவர் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். 



பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ரேஷன் கடையில் ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...