மத்திய அரசை கண்டித்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்தவெளி மாநாடு!

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், LPF, AITUC, HMS, MLF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.


கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது.

நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.



குறைந்தபட்ச மாத ஊதியம் 28 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 10,000 வழங்க வேண்டும், வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கிட வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பத்து சதவீதத்திற்கு மேல் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்க கூடாது, தமிழ்நாட்டில் உள்ள என்.டி.சி ஆலைகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து ஆலைகளையும் உடனடியாக இயக்கி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.



இவ்வாறான 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் LPF, AITUC, HMS, MLF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் திறந்த வெளி மாநாடுகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் முதல் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இதில் எஸ்.எம்.எஸ். மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார்.

மேலும் இந்த மாநாட்டில், LPF தமிழ்செல்வன், AITUC ஆறுமுகம், INTUC சண்முகசுந்தரம், CITU ரத்தினகுமார் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...