உதவி ஜெயிலர் பணிக்கான தேர்வு - கோவையில் விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வு எழுதினர்!

தமிழக முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற உதவி ஜெயிலர் பணிக்கான எழுத்து தேர்வில் கோவை மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 45 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற ஜெயிலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உதவி ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் அதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்நடைபெற்றது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த தேர்வுக்காக 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அனைத்து மையங்களிலும் காலை ஒன்பது முப்பது மணி முதல் இந்தத் தேர்வானது இணையதளம் மூலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 40 முதல் 45 சதவீதம் வரையிலான தேர்வர்கள் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் டி.சி.எஸ் நிறுவனம் மூலம் இந்த தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...