உடுமலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் உடுமலை - பழனி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துடன் பலமுறை பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.



இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை - பழனி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கோட்டை பிரிவு பகுதியில் காலி குடங்களுடன் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறையினர் முறையாக குடிநீர் வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக பொதுமக்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் காரணமாக உடுமலை - பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...