அம்ருத் 2.0 திட்டம் குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் - பாஜக மனு!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெரியநாயக்கன்பாளையம் பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: அம்ருத் 2.0 திட்டம் குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் பாஜக நகர மண்டல தலைவர் மகேந்திர ராஜ் தலைமையில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்த சமூக வலைத்தளமான "நம்ம பெரியநாயக்கன் பாளையம்" என்ற முகநூலில் பணிகள் தொடங்கியுள்ளது என்ற செய்தி ஒன்றாம் தேதி அன்று வெளியாகி உள்ளது.

இந்தத் திட்டத்தை பற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்கும் பொழுது சரியான பதில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இத்திட்டத்திற்காக தொடக்க விழாவோ பூமி பூஜையோ நடத்தப்படவில்லை, அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை அதன் மதிப்பீடும் தெரியப்படவில்லை.

இந்த திட்டமானது எப்பொழுது துவங்கப்படும்? இத்திட்டம் மத்திய அரசின் திட்டமா அல்லது மாநில அரசின் திட்டமா என்று மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை எனவும் இதன் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...