ஆனைகட்டி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்த்தில் மூழ்கி இளைஞர் பலி!

கோவை ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வைசாக் (24) என்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் உடலை கைப்பற்றிய தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே தனியார் ரிசார்டின் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்த நஞ்சுண்டன் என்பவரது மகன் வைசாக் (24). இவர் கோவையில் உள்ள தனியார் பிபிஓ ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வைசாக் தனது நண்பர்களுடன் ஆனைகட்டியில் உள்ள கார்னிஷ் ரிசார்ட் என்ற தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது நண்பர்களுடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்த போது, வைசாக்கிற்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார் வைசாக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...