‘நான்‌ எப்போதும்‌ உங்களுக்காகவே இருக்கிறேன்‌’ - ஈஷா நிறுவனர் சத்குருவின்‌ குரு பெளர்ணமி வாழ்த்து செய்தி!

குரு பௌர்ணமி தினத்தையொட்டி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உயிர் மூச்சு, முக்திக்கு நோக்கம் என என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும்‌ எடுத்து கொள்ளலாம்‌. ஆனால்‌, நான்‌ எப்போதுமே உங்களுக்காக தான்‌ இருக்கிறேன்‌. என கூறியுள்ளார்.



கோவை: நான்‌ எப்போதுமே உங்களுக்காக தான்‌ இருக்கிறேன்‌ என குரு பௌர்ணமியையொட்டி பக்தர்களுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக முக்கியத்துவம்‌ வாய்ந்த குரு பெளர்ணமி தினமான நேற்றைய தினம் சத்குரு,‌ அனைவருக்கும்‌ தன்‌ அருளாசிகளை வழங்கியுள்ளார்‌. இதுதொடர்பாக அவர்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள விடியோவில்‌ கூறியிருப்பதாவது,

சத்குரு, உங்கள்‌ இதய துடிப்பாக இருக்க முடியும்‌, உங்கள்‌ உயிர்‌ மூச்சாக இருக்க முடியும்‌ அல்லது உங்கள்‌ முக்திக்கு நோக்கமாகவும்‌ இருக்க முடியும்‌. உங்கள்‌ விருப்பம்‌, நீங்கள்‌ என்னை எப்படி வேண்டுமென்றாலும்‌ எடுத்து கொள்ளலாம்‌. ஆனால்‌, நான்‌ எப்போதுமே உங்களுக்காக தான்‌ இருக்கிறேன்‌. இவ்வாறு கூறியுள்ளார்‌.

நம்‌ பாரத கலாச்சாரத்தில்‌ ஆன்மீக பாதையில்‌ இருப்பவர்களுக்கு குருவின்‌ தேவையும்‌, அவரின்‌ வழிகாட்டுதலும்‌ மிகவும்‌ அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில்‌ சத்குரு ஜக்கி வாசுதேவ், சம காலத்தில்‌ உலகெங்கும்‌ உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக சாதகர்களுக்கு குருவாக விளங்குகிறார்‌.

குரு பெளர்ணமியை முன்னிட்டு சத்குருவின்‌ அன்பளிப்பாக, 'உயிர்‌ நோக்கம்‌' என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ்‌ மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஆன்லைன்‌ வாயிலாக ஜூலை 7 முதல்‌ ஜூலை 9 வரை 3 நாட்கள்‌ நடைபெறும்‌ இந்த யோகா வகுப்பில்‌ பஞ்ச பூதங்களின்‌ உதவியுடன்‌ ஒருவர்‌ தனது உடல்‌ மற்றும்‌ மன நலத்தை மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வழிமுறைகள்‌ கற்றுக்‌ கொடுக்கப்படும்‌.

இவ்வகுப்பில்‌ பங்கேற்க Isha.co/unosm என்ற இணையதள முகவரியில்‌ ஜூலை 4-ம்‌ தேதி நள்ளிரவுக்குள்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...