மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா!

மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் ஆதரவுடன், திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் ஆதரவுடன் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் புலியகுளம் அருகே உள்ள கிட்னி சென்டர் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் ரீனா ரோஸ்லின். மாற்றுத்திறனாளியான இவர், தனது கணவர் சிவகுமாருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரீனா ரோஸ்லின் கூறியதாவது, நான், எனது கடையை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். புலியகுளம் கவுன்சிலர் முனியம்மா மற்றும் அவரின் கணவர் பாலமுருகன் பெயரில், திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் எனது கடையை தர வற்புறுத்தினார். ஆனால் நான் தர மறுத்துவிட்டேன்.

இந்த சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென கடையை எடுக்க வற்புறுத்தி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து ரீனா ரோஸ்லின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனுவை அளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மாற்றுத்திறனாளி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...