கோவையில் பிரபல வைர நகை உற்பத்தி நிறுவன அதிபர் ரூ.60 லட்சம் மோசடி - முன்னாள் ஒப்பந்த ஊழியர் பரபரப்பு புகார்!

கோவை ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வைர நகை உற்பத்தி நிறுவன அதிபர் மீது ரூ.60 லட்சம் மோசடி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்த ஊழியரான பரமகுரு என்பவர் புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவையில் உள்ள பிரபல வைர நகை உற்பத்தி நிறுவன அதிபர் ரூ.60 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்த ஊழியர் புகார் அளித்துள்ளார்.



கோவை பன்னிமடை அடுத்த பழனிகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமகுரு. இவர் கோவை ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தங்க மற்றும் வைர நகை தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தங்க நகை உற்பத்தி பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் அவரது பணியை பாராட்டி நிறுவன உரிமையாளரான சீனிவாசன் கடந்த 2017 ம் ஆண்டு முதல் அதே நிறுவனத்தில் வைர நகை உற்பத்தி பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி உள்ளார். பரமகுருவின் பணிக்காக நகை தயாரிப்பின் அடிப்படையில் ஒரு ஊதியமும் மற்றும் மாத சம்பளமாக 30,000 ரூபாயும் தருவதாக நிறுவன உரிமையாளர் ஸ்ரீனிவாசன் உறுதி அளித்துள்ளார். 

அதுமட்டுமின்றி அப்பிரிவில் பணியாற்றுவதற்காக பரமகுரு பரிந்துரையின் பெயரில் 45 ஊழியர்களையும் நியமித்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு உற்பத்தி குறைவை காரணம் காட்டி பரமகுரு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் அவருக்கு தர வேண்டிய 60 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் உரிமையாளர் சீனிவாசன் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

பலமுறை பரமகுரு தனக்கு தரவேண்டிய தொகையை தரும்படி கேட்டபோது நிறுவன அதிபர் சீனிவாசன் அவரை தகாத வார்த்தை பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வலியுறுத்தி, பரமகுரு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,



நான் வைர நகை பிரிவில் பணியில் இணைவதற்கு முன்பு வெறும் ஐந்து கோடி ரூபாய் மட்டுமே அந்த நிறுவனத்தில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. எனது கடுமையான உழைப்பின் அடிப்படையில் தற்போது பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மேலும் எனக்கு தர வேண்டிய தொகையை கேட்டு உரிமயாளரின் வீட்டிற்கு சென்றால் தரக்குறைவாக பேசி வீட்டு பக்கம் வந்தால் தொலைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். தன்னிடம் வெற்று முத்திரைத்தாளில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...