கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து : வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் திடீர் சாலை மறியல்!

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அண்ணா நகரில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வது வழக்கம். இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதியினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா நகர் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தந்தை மற்றும் மகள் இருவரும் காயமடைந்தனர்.



இதனைத்தொடர்ந்து அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்கள் நடப்பதாகவும் அதனை தடுக்க வேகத்தடை அமைத்து தர கோரி பல்லடம் தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...