வால்பாறையில் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி கழக இயக்குனர் ஆய்வு!

வால்பாறையில் கன மழை பெய்து வரும் நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் கோவை மாவட்ட தென்மேற்கு பருவ மழை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: வால்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சிக் கழக இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் மரங்கள் விழுந்த நிலையில், சரி செய்யப்பட்டு உள்ளது.

மழையினால் பொது மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் கோவை மாவட்ட தென்மேற்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் வால்பாறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகள் குறித்தும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்தும் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.



இதில் அதிகமாக தண்ணீர் செல்லும் கூழாங்கல் ஆறு, குடியிருப்பு அருகில் செல்லும் வாழை தோட்டம் ஆறு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரி, வால்பாறை மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஜெயஸ்ரீ முரளிதரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இவர்களுடன் வால்பாறை தாசில்தார் அருள் முருகன், நகர மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி செல்வம் மற்றும் வால்பாறை நகராட்சி ME. வெங்கடாசலம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...