கனிமவள கொள்ளையை தடுக்க கோரி PEOPLE OF COIMBATORE அமைப்பு ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

கனிமவள கொள்ளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி PEOPLE OF COIMBATORE அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கனிமவள கொள்ளையை தடுக்க கோரி PEOPLE OF COIMBATORE அமைப்பு ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் என பலரும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



இந்நிலையில் கனிம வளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் PEOPLE OF COIMBATORE அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது, சுய நலனுக்காக கனிம வளங்களை வெட்டி எடுப்பதை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும். கல்குவாரியில் பயன்படுத்தும் வெடி மருந்துகளால் கற்பாறைகள் விவசாய நிலத்தில் விழுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் கனிம வளத்தை எடுக்கும் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், இரவு நேரங்களில் செயல்படும் குவாரிகளின் உரிமைக்கு ரத்து செய்ய வேண்டும்.

கனிமவள கடத்தலுக்கு துணை போகும் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். போலி அனுமதி சீட்டு பயன்படுத்தும் உரிமையாளர்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்.

கனிமவள கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை தடுத்து நிறுத்தும் கிராமமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது. மனித விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிர் பிரிந்தால் 50 லட்சம் பிறப்பீடு தர வேண்டும்.

இவ்வாறான பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...