கோவை இருகூர் பேரூராட்சியில் உள்ள மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் மனு!

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் ஆறு மதுபான கடைகளை அங்கிருந்து அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இருகூர் பேரூராட்சியில் பகுதியில் உள்ள 6 மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள ஒண்டிப்புதூர் மேம்பாலம், ஏ.ஜி புதூர் சாலை, சின்னியம்பாளையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஆறு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும் மது அருந்தி விட்டு அருகில் உள்ள வீடுகளின் முன் மது பிரியர்கள் படுத்து உறங்குவதுடன் தகாத வார்த்தைகளில் அவர்களை பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய மதுபான கடைகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...