நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்லடத்தில் கைத்தறி நெசவாளர்கள் பேரணி!

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன் பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவாங்கர் சமுதாய மக்கள் கைத்தறி நெசவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கைத்தறி மூல பொருளாக கருதப்படும் பட்டு நூல், பருத்தி நூல் ஆகியவற்றின் விலையானது கடுமையாக உயர்ந்து நிரந்தரமான விலை இல்லாததால் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.



இதையடுத்து காமநாயக்கன் பாளையம் சவுண்டம்மன் கோவிலின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் பேரணியாக அங்குள்ள தபால் நிலையம் நோக்கி சென்றனர்.



பட்டு மற்றும் பருத்தி நூல்களுக்கான விலையை நிர்ணயம் செய்யக்கோரியும், குறியீடு போடப்பட்ட கைத்தறி துணி வகைகளை கைத்தறியிலேயே நெசவு செய்ய அரசாணை இருக்கும் நிலையில் அதனை செயல்படுத்த தமிழக முதல்வரை வலியுறுத்தியும், 250 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்து நூதன கவன ஈர்ப்பு போராட்டதில் ஈடுபட்டனர்.



இந்த நூதன போராட்டத்தில் சூலூர் தொகுதி அதிமுக எம் எல் ஏ கந்தசாமியும் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தேவாங்கர் சங்க தலைவர் சண்முகம், கே கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் படையப்பா மூர்த்தி மற்றும் 200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...