உடுமலையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.185க்கு விற்பனை - இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!

உடுமலை காய்கறி மார்க்கெட்டில் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.185க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், சின்ன வெங்காய விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



திருப்பூர்: உடுமலை காய்கறி மார்க்கெட்டில் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.185வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகின்றது. சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காதது சாகுபடி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் சின்ன வெங்காயம் உடுமலை சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து வருகின்றது. அதாவது கடந்த சில வாரங்கள் முன் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.



ஆனால் தற்போது, சந்தையில் இருப்பு வைத்த நன்கு உலர்ந்த வெங்காயம் தரத்திற்கு ஏற்ப ஏலம் முறையில் கிலோ 185 ரூபாய்க்கும், 40 கிலோ பை ரூ.7400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சமையலில் முக்கியமாக கருதப்படும் சின்ன வெங்காயம் அதிரடி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...