கோவையில் புதுமண தம்பதிக்கு சின்ன வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்!

கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிக்கு, அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம், மற்றும் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக அளித்துள்ளனர்.



கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹாலில் கணேஷ் -ஹேமா தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மணமகனின் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...