கருணாநிதி நூற்றாண்டு விழா - 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில், கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் திமுக சார்பில், 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மருத்துவ முகாம், பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.



இதேபோல், கோவை தேர் நிலைத்திடலில், கோவை மாநகர் மாவட்டம், பெரிய கடைவீதி பகுதி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.



இதில்., தையல் எந்திரம், சேலை, மிக்ஸி, ஐயன்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பொருட்கள் 5 ஆயிரம் பேருக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நா.கார்த்திக் கூறியதாவது,



முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவையில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கல்வி உதவித்தொகை, தையல் எந்திரம், மிக்ஸி, கிரைண்டர், ஐயன்பாக்ஸ், சேலை என பயன் உள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் அனைத்து பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவோம்.

பாஜகவை சேர்ந்தவர்கள் வாய்க்கு வந்தபடி உளறி வருவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் உள்ளோம்.

பாஜகவினர், மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள், நாங்கள் அப்படி இல்லை. ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி மக்கள் பணி செய்வதோடு மட்டுமின்றி, மக்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...