நில உரிமை வழங்க வலியுறுத்தி உடுமலையில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்!

நில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் வனத்துறை அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உடுமலை வனத்துறையை கண்டித்து ஊர்வலத்தில், ஈடுபட்டனர்.



இதில், 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி நில உரிமை வழங்க வேண்டும். நிலப்பகுதியில் இருந்து செல்லும் பாதைகளை கான்கிரீட் பாதைகளாக மாற்றம் செய்ய வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் திடீரென வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது உடுமலை வனத்துறையை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.

மேலும் வனப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாலை அமைக்க அனுமதி அளித்தும், உடுமலை வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் உள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



மலைவாழ் மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உடுமலை வனத்துறை அலுவலகத்தை முன்னிட்டு சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...