பாஜக கண்டுகொள்ளவில்லை..! - பேரூராட்சித் தலைவர் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் 5,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தந்த தங்களை பாஜக கண்டுகொள்ளவில்லை எனக்கூறி தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் மற்றும் 7 வார்டு உறுப்பினர்கள் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் உட்பட சுமார் 5000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவராக இருப்பவர் கண்ணம்மாள். கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் ருத்ராவதி பாஜவுக்கு ருத்ராவதியில் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நீண்ட நாள்களாகியும் வராததற்கு கண்டனம் தெரிவித்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் கூறியதாவது, எனது தலைமையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 5,000க்கும் அதிகப்படியான வாக்குகளை பாஜகவுக்கு பெற்று கொடுத்துள்ளோம்.

இந்தப் பேரூராட்சியில் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், கட்சித் தலைமை இதுவரை எங்களை கண்டுகொள்ளவில்லை.



அதனால், ருத்ராவதி பேரூராட்சித் தலைவர் மற்றும் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பாஜகவின் முதலாவது பேரூராட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ள 4000க்கும் மேற்பட்டோர் வேறு கட்சியில் இணைய உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...