தாராபுரம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட மேலும் ஒரு டவுசர் கொள்ளையன் கைது!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 டவுசர் கொள்ளையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 3வது கொள்ளையனான தேனியை சேர்ந்த ரமேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேலும் ஒரு டவுசர் கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் பகுதியில் டவுசர் கொள்ளையர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில், துணை ஆய்வாளர் கருப்புசாமி, காவலர்கள் கலைச்செல்வன், வேலுமணி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தாராபுரம் பகுதியில் திருடிய டவுசர் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், தேனி மாவட்டம் ஜங்கிள்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற மூசா (52), தேனி காமாட்சிபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அர்ஜுனன் (28) ஆகியோரை கைது செய்தனர்.



இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் குப்பிய நாயக்கன்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்த டவுசர் கொள்ளையன் ரமேஷ் (45) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

இவர் மீது மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் திருட்டு வழக்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...