பெண் போலீசாரை கன்னத்தில் அறைந்ததாக மதுரையைச் சேர்ந்த 2 பெண்கள் சூலூரில் கைது!

மதுரையை சேர்ந்த நந்தினி, நிரஞ்சனா என்ற சகோதரிகள், உதகையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்ற மோகன் பகவத்துக்கு எதிராக போராட சென்ற போது, இருவரையும் தடுக்க முயன்ற பெண் போலீசாரை தாக்கியதாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பெண் போலீசாரை தாக்கியதாக மதுரையை சேர்ந்த பெண்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதகையில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய கூட்டம் நடைபெற்றது. அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். இந்தக் கூட்டம் தமிழ்நாட்டில் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகிய சகோதரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சூலூர் போலீசாருக்கு பெண்கள் இருவரும் அரசு பேருந்தில் கோவையை நோக்கி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சூலூர் காவல் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையில் இருந்து வந்த அரசு பேருந்தில் பெண்கள் இருவரும் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வர முயன்றனர். அப்போது பெண்கள் இருவரும் பெண் போலீசாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஆனந்தி என்ற பெண் காவலருக்கு கன்னத்தில் மூன்று அறைகள் விழுந்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து அவர்கள் இருவரையும் பிடித்து சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது போலீசாரை தகாத வார்த்தையில் பேசி திட்டி உள்ளனர்.

இது சம்பந்தமாக போலீசார் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகிய இருவரையும் கைது செய்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...