திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்!

திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். வர்த்தகர்கள் - பொறியாளர்கள் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பிலான 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஆண்டுதோறும் திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.



ஆண்டுதோறும் கட்டிடங்களுக்கு தேவையான புதுவகை தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இந்த கட்டிட கட்டுமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த ஆண்டுக்கான கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி தொடங்கியது.



இதனை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் செங்கற்களுக்கு மாற்றாக வரப்பட்டுள்ள கற்கள், கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் மற்றும் உயர்த்தும் தொழில்நுட்பம், புதுவகை பர்னிச்சர்ஸ், புதிய வகை எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் நாள் நிகழ்வில் வர்த்தகர்களுக்கும் பொறியாளர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...