உடுமலையில் 3 நாட்களாக நடைபெற்ற மலைவாழ் மக்கள் போராட்டம் வாபஸ் - ஆடி, பாடி கொண்டாட்டம்!

உடுமலை அருகே தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து மலைவாழ் மக்கள் 3 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12ஆம் தேதி மலைவாழ் மக்கள் திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை சாலை அமைக்க அனுமதி வழங்காத உடுமலை வனத்துறை மற்றும் 2006 வன உரிமை சட்டத்தை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தை உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இந்த நிலையில் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் 3வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.



இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட வன உரிமை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்கள் போராட்ட குழுவினர், வனத்துறையினர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் திருமூர்த்திமலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5.37 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



பின்னர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற பகுதியில் இனிப்புகள் வழங்கி மலைவாழ் மக்கள் பாரம்பரியமான இசைக்கருவிகள் இசைக்க மலைவாழ் மக்கள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்த மழைவாழ் மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. உடுமலையில் மலைவாழ் மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...