நவக்கரை அருகே இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை!

நவக்கரை அருகேயுள்ள வனப்பகுதியில் மற்றொரு விலங்குடன் நடந்த சண்டையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்த நிலையில், உடலை கைப்பற்றிய வனத்துறையினர் மருத்துவ குழுவினர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்த பின் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் நவக்கரை அருகே சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை அடுத்த அட்டமலை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை வனத்துறை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து இறந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இறந்த சிறுத்தை சுமார் 1.5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பதும், வேறு ஒரு வனவிலங்குடன்ஏற்பட்ட மோதலில் சிறுத்தையின் பின்பகுதியில் கடித்து இழுத்ததில் குடல் வெளியே வந்து உயிரிழந்தது தெரியவந்தது.



மேலும் சிறுத்தையின் உடலில் ஆங்காங்கே வேறு விலங்கின் நகத்தடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து இறந்த சிறுத்தை உடல் அதே அதிகாரிகள், வன ஆர்வலர்கள் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...