சர்வதேச நீதி நாள் - உடுமலை பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்!

சர்வதேச நீதிநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் M.மணிகண்டன் மற்றும் K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சட்ட உதவி மைய சேவைகளை பெறுவது குறித்து எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: சர்வதேச நீதி நாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் வட்டசட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நேற்றைய தினம் (17.07.2023) "சர்வதேச நீதிநாள்"-ஐ முன்னிட்டு உடுமலைப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியான, M.மணிகண்டன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி, K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே இலவச சட்ட உதவி மையத்தின் சேவைகள் மற்றும் மக்கள் அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.



இதில் வழக்கறிஞர்கள், அப்துல்நாசர், செந்தில்குமார், மகேஸ்வரன், சத்தியவாணி, தம்பிபிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை சட்டம் ஒழுங்கு உதவி காவல் ஆய்வாளர்கள், சிவராஜ், தங்கவேல் பிற காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சட்ட சேவைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...