எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் - திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க பெங்களூருவுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர்.



திருப்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவிரி பிரச்சனையில் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், பெங்களூரு சென்றுள்ள தமிழக முதல்வர் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பாமல் கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் அரசோடு இணக்கமாக செயல்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



திமுக அரசின் இரட்டை வேடம் மற்றும் அதன் தலைவர்களின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பாஜகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

மத்திய அரசில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் இரு மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீரை சம பங்கீடாக வழங்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்திற்கு 177 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கிறது.

நடந்து முடிந்த கர்நாடக மாநில தேர்தலில் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அதற்காக ஒன்பதாயிரம் கோடி ஒதுக்குவோம் என தேர்தல் வாக்குறுதியிலேயே காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல், இன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசாமல் கூட்டணி என்ற பெயரில் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசோடு இணக்கம் காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதே நிலை தொடருமானால் வீதிகளில் இறங்கி பாஜக போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...