தாராபுரம் அருகே குப்பையில் கிடந்த காலாவதி மருந்துகள் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள், சாலையோரம் கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



குப்பையில் கிடந்த மாத்திரைகளில், இது தமிழ்நாடு அரசு வழங்குவது, விற்பனைக்கு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.



மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிய மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்களை மக்களுக்கு தராமல் வைத்திருந்து, காலாவதியான பின் குப்பையில் கொட்டப்பட்டதா, தேவைக்கு போக மீதம் இருந்த மருந்து பொருட்கள் என்றால் உரிய இடத்தில் ஒப்படைக்காதது என் எனவும், இதை செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

மக்களை சென்றடைய வேண்டிய மருந்து பொருட்கள், குப்பையில் கிடப்பதற்கு யார் பொறுப்பு என்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வர்லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...