கோவை கோட்டைமேடு நல்லாயன் துவக்க பள்ளியில் மாணவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.



கோவை: கோட்டைமேடு நல்லாயன் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, மாணவ தலைவராக சஜ்ஜாத் முஜாஹித் 184 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவராக ஹிஸாம் அஸ்லம் 182 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பள்ளி உணவு தலைவராக ஜெரோம் ரையான் 133 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

பள்ளி விளையாட்டு தலைவராக இம்ரான் 173 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பள்ளி சுற்றுச்சூழல் தலைவராக முகமது பாரிஸ் 119 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர் விமல் வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.



மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இதனிடையே வெற்றி பெற்ற மாணவர்களை சக மாணவர்கள் தூக்கி கொண்டாடினர்.

இதனை அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற மாணவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...