மன அழுத்த நோய் - செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தாராபுரம் அடுத்த பூங்கா சாலை அருகேயுள்ள வி.எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற இளம்பெண் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உறவினருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த பூங்கா சாலை அருகேயுள்ள வி.எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகள் ஸ்வேதா (21). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த ஸ்வேதா நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.



இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாராபுரம் போலீஸார் ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், தீவிர மன அழுத்த நோயால் (ஓ.சி.டி) பாதிக்கப்பட்டிருந்த ஸ்வேதா கடந்த சில ஆண்டுகளாக அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் மன அழுத்தத்துக்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஸ்வேதா வீடு திரும்பியுள்ளார். இதுபோன்று அடிக்கடி ஸ்வோதா தற்கொலைக்கு முயன்றுள்ளாராம். கடந்த சில நாள்களாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்வேதா காலையில் தாமதமாகத்தான் எழுவாராம்.

நேற்று காலை 9 மணியாகியும் கதவைத் திறக்காததால், வழக்கம் போல் தாமதமாக எழுவார் என ஸ்வேதாவின் தாய் ராஜாமணி இருந்துள்ளார்.

இந்த நிலையில், காலை, ராஜாமணியை செல்போனில் அழைத்த அவரது சகோதரர் மகள் நித்யா, மன அழுத்த பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஸ்வேதா தனக்கு திங்கள்கிழமை இரவு மெசேஜ் அனுப்பியுள்ளாதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ஸ்வேதாவின் தாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்வேதா அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மன அழுத்த பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...