கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தினர் ஆட்சியரிடம் மனு!

கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை நேரில் சந்தித்து கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கைத்தறி ரகங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தினை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். நெசவு உற்பத்தி கொள்முதல் இல்லாத காலங்களில் நெசவாளர்கள் குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் வருடத்திற்கு 5,000 ரூபாய்க்கு கைத்தறி உற்பத்தி துணிகளை வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும், நெசவாளர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நெசவாளர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டும்.

நெசவாளர்களுக்கு மூலதன கடன் வழங்க வேண்டும், கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

கைத்தறி நெசவாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு நலன் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டையை மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த மனு அந்த இயக்கத்தின் மாநில கௌரவ தலைவர் பசுபதி தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...