உடுமலை அருகேயுள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

உடுமலை அடுத்த நரசிங்காபுரத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், சுமார் ஒரு கோடி மதிப்பிலான இயந்திரங்கள், தென்னை மட்டைகள் மற்றும் டிராக்டர்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் மைவாடி ஊராட்சி நரசிங்காபுரத்தில், கன்னிமுத்து என்பருக்கு சொந்தமான, சுஷ்மா தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.



இந்த தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



தென்னை மட்டைகளில் ஏற்பட்ட தீ காற்றின் வேகத்தால் மளமளவென பரவி, தென்னை நார் தொழிற்சாலை முழுவதுமாக தீயில் எரிந்து சேதமானது.



இதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான இயந்திரங்கள், தென்னை மட்டைகள் மற்றும் டிராக்டர்கள் தீயில் எரிந்து சேதமாகின.



தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



முன்னதாக அருகிலுள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட தீ தென்னை நார் தொழிற்சாலைக்கும் பரவியதாக கூறப்படுகிறது.



காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...