பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோர மின்கம்பங்களை அகற்றாமல் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்!

பல்லடம் - தாராபுரம் இடையேயான சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் பணிகள் நடைபெற்று வருவதால் பேரிடர் காலங்களில் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொதுமக்கள், மின்கம்பங்களை அகற்றிவிட்டு சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கத் திட்டத்தில் சாலையோர மின் கம்பங்களை அகற்றிவிட்டு கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யும் பணி பல்வேறு நிறுவனங்களால் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே, சாலையோரங்களில் ஏற்கனவே மின்வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த ரோட்டோர மின்கம்பங்களை கவனிக்காமல் சாலை விரிவாக பணியின் போது ரோட்டோரம் மின் கம்பங்களை அப்படியே நடுவில் வைத்து இருபுறமும் கழிவுநீர் சாக்கடை செல்லும் கால்வாயானது அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறியதாவது, மழை, சூறாவளி காற்று போன்ற பேரிடர் காலங்களில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியின் போது சாக்கடை கழிவுநீர் வாய்க்காலின் நடுப்பகுதியில் வைத்துள்ளதால் ரோட்டோர மின்கம்பங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் உடைமைகளை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக நகராட்சியும், மாநில நெடுஞ்சாலை துறையினரும், மின்சார வாரியமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள சாக்கடை கால்வாய் நடுவில் உள்ள ரோட்டோர மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...