நூற்பாலைகள், ஜவுளி தொழில் பாதிப்பு குறித்து தொழில் அமைப்புகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை!

தமிழக நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் குறித்து தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஜவுளி மற்றும் நூற்பாலை தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து கோவையை சேர்ந்த ஜவுளி தொழில் மற்றும் நூற்பாலை தொழில் அமைப்புகளுடன் தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,

1. ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தித்துறை சம்பந்தமான, குறிப்பாக மத்திய நிதி அமைச்சகம் சம்பந்தமான கோரிக்கைகளை, தரவுகளுடன், இந்த ஆண்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி நிலையையும் கணக்கில் கொண்டு, ஒரு நிதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அளிக்கலாம்.

2.மற்ற மாநில நூற்பாலைகள் மிக நவீன இயந்திரங்களை அந்தந்த அரசுக்களின் சலுகைகளை பயன்படுத்தி நிறுவி உள்ளதால், அவர்களது உற்பத்தி செலவு நம்மை விட குறைந்து உள்ளதால் நூல் ஏற்றுமதி சந்தையில் தமிழக நூற்பாலைகளால் போட்டியிட இயலாத நிலை உள்ளது.

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் பயன்படுத்தும் அத்தகைய தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு தமிழக நூற்பாலைகளை தயார்படுத்தும் வகையில் சிறப்பு நிதி உதவித் திட்டத்தை தமிழக அரசு ஆலோசித்து செய்லபடுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...