பச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தை ஜப்தி செய்த வந்த நீதிமன்ற ஊழியர்கள் - பரபரப்பு!

பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் செயல்பட்டு ஆவின் பால்பண்ணையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 17 ஊழியர்களுக்கு நீண்ட காலமாக அவர்களுக்கான விடுமுறைக்கான (அரியர்ஸ்) தொகை வழங்காமல் நிலுவையில் இருந்து வந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கடந்த ஆண்டு கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஊழியர்களுக்கு 90 நாட்களில் உரிய தொகையை வழங்க வேண்டும் என கடந்த அக்டோபரில் உத்தரவிட்டார். ஆனால், ஆவின் நிர்வாகம் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து வந்தது.

இந்நிலையில், ஊழியர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின் பேரில், நீதிமன்ற அமீனா நாகராஜ், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஆவின் நிறுவனத்திற்கு நேரில் சென்று ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆவின் பால்பண்ணையில் உள்ள 30 கணினிகள், ஒரு இன்னோவா கார், ஜெனரேட்டர் உள்பட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆவின் நிர்வாக அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.47 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இதனை தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக கோவை ஆவினில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...