ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!

ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்கி வரும் ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப்பின் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதிய தலைவராக சரவணன்,செயலாளராக ஜெயராம், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.



கோவை: ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி சார்பாக ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள் என பல்வேறு சமூகம் நலம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2023-24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை ரத்னா ரெசிடென்சி ஒட்டல் அரங்கில் நடைபெற்றது.



சார்ட்டர் பிரசிடெண்ட் மூத்த வழக்கறிஞர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்ட்டர் செக்ரட்டரி ராஜசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எமரால்டு ஜூவல் குழும நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், எதிர்கால மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் புதிய தலைவராக சரவணன்,செயலாளராக ஜெயராம், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

இதே போல ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் அமைப்பிற்கு ரூபாய் அறுபதாயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள், தீத்தீபாளையம் அரசு பள்ளியில் நூலகம் அமைப்பதற்கான புத்தகங்கள் மற்றும் அலமாரி, வழங்கப்பட்டது.



தொடர்ந்து ரோட்டரி கிளப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் இண்டஸ் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் நிர்வாகிகள் கனகராஜ், முகமது சபியுல்லா மற்றும் உப தலைவர் உமா பிரபு, பிரபுராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...