திருப்பூரில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் - ஆட்சியர் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான முதல்கட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவங்கி வைத்தார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூரில் மகளிர் உரிமை திட்டம் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாமினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்று 225 ஊராட்சிகள் 13 ஊராட்சி ஒன்றியங்கள் 30 மாநகராட்சி வார்டுகளில் நடைபெற்றது. இந்த விண்ணப்ப பதிவு முகாமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் விண்ணப்ப பதிவு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



விண்ணப்ப பதிவு முகாமில் கலந்து கொள்ளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அவர்களது இல்லங்களுக்கு கொண்டு சென்று விண்ணப்பங்கள் மற்றும் கலந்து கொள்ள வேண்டிய தேதி நேரம் ஆகியவை குறிப்பிட்ட டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...