பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மணிப்பூரில் மகளிருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி தலைமையிலான, ஒன்றிய பாசிச பாஜக அரசையும், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசையும் கண்டித்து, தாராபுரம் அண்ணா சிலை முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி, பாஜக அரசின் மீது உள்ள தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி தலைவருமான சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், காங்கயம், தாராபுரம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமுக மகளிர் அணி சார்பில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...