கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 1.15 கிலோ கஞ்சா பறிமுதல்!

பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபுல்யூ பாலம் அருகே போலீசாரின் ரோந்து பணியின் போது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், விஷ்ணு சங்கர் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். இந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப் பகுதியில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான காவலர்கள் பெரியநாயக்கன் பாளையம் எல்.எம்.டபுல்யூ பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், விஷ்ணு சங்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் அங்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...