‘சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களும் நவீனப் பாடல்களே’ - கோவை புத்தக கண்காட்சியில் கவிஞர் இளம்பிறை உரை!

நவீனம் என்றால் வானத்தில் இருந்து குதித்த சொல்லாடல் இல்லை. மரபின் வேர்களைத் தாங்கி வருபவை. புதுமைகளைத் தாங்கி வருவது நவீனம். இந்த உத்தியைத் தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதி தான் எனக்கூறிய கவிஞர் இளம்பிறை, அவர் தான் நவீன வசனக் கவிதையைத் தொடங்கி வைத்தார் என்றும் தெரிவித்தார்


கோவை: நவீன வசனக் கவிதையை தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதியார் தான் என கோவை புத்தக கண்காட்சியில் கவிஞர் இளம்பிறை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஆகிய இணைந்து நடத்தும், “7-வது புத்தகத் திருவிழா – 2023”, கோவை - அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், ஐந்தாம் நாளான நேற்று (25.07.2023) நடைபெற்ற “நவீனக் கவிதையும் இசையும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில், கவிஞர் இளம்பிறை பேசியதாவது, நவீனம் என்றால் என்ன? பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அனைத்துக் கலை வடிவங்களிலும் மாற்றங்கள் எற்பட்டன. இலக்கியத்தில் புதிய ஒளிக் கீற்றுகள் தோன்றின.

நவீனம் என்றால் ஏதோ வானத்தில் இருந்து குதித்த சொல்லாடல் இல்லை. மரபின் வேர்களைத் தாங்கி வருபவை. புதுமைகளைத் தாங்கி வருவது நவீனம். இந்த உத்தியைத் தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதி. நவீன வசனக் கவிதையைத் தொடங்கி வைத்தார். அதற்காக மரபை எதிர்க்கவில்லை.

இப்படியும் எழுதலாம் என்ற புதிய பாதையை வகுத்துக் கொடுத்தவர். புதிய கதவைத் திறந்து வைத்தவர். இதன் வழியாக வந்த கவிஞர்கள் ஏராளம். மிகப்பெரிய சுதந்திரம் நவீனக் கவிதைகளில் இருந்தன.

நவீனத்தை காலம், கருத்தை அடிப்படையாக கொண்டு பார்க்க வேண்டும். சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களை நவீனமாகவே பார்க்கிறேன். இன்றும் சங்க இலக்கியங்களைப் பேசுகிறோம் என்றால், அதன் நீட்சி இன்றளவும் தொடர்கிறது.

நவீனம் என்பது ஹைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகளில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. அதை நாட்டுப்புறப் பாடல்களிலும் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்ந்து திரைப்படக் கலைஞர் ரவி சுப்பிரமணியம் நவீனக் கவிதைகளுக்கு மெட்டமைத்துப் பாடினார். இந்நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் வி.திருஞானம், கோவை புத்தகக் கண்காட்சித் தலைவர் கே.ரமேஷ் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...