கோவையில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் - அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு!

கோவை பீளமேடு - ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் பெறும் முகாமினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவையில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப படிவம் பெறும் முகாமை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை பீளமேடு - ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப படிவம் பெறும் முகாமினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கு பணி துவங்கி இருக்கிறது. இந்த திட்டம் அநேகமாக இந்தியாவிலேயே சிறந்த திட்டமாக முதல்வர் அறிவித்துள்ளார். அந்த பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 1401 ரேசன் கடைகளில் முதற்கட்டமாக 839 கடைகளில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் 1679 தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். 53693 பேருக்கு ஆய்வு செய்து விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

ஆவாராம்பாளையம் பகுதியில் உள்ள ஆய்வு செய்து வரும் பகுதியில் 1088 குடும்ப அட்டைதாரர்களில் 141பேர் இதுவரை வந்திருக்கிறார்கள். 30ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் மீதம் உள்ளவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கும். கடைசி இரண்டு நாட்கள் விடுபட்டவர்கள் முழுமையாக வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தாராபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நடந்துள்ளதா என விசாரித்து வருகிறார்கள். அவ்வளவு மோசமான நிலைமையில் கோவை அரசு மருத்துவமனை இல்லை என்பது தான் உண்மை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...