உடுமலையில் ஆசிய ஹாக்கி கோப்பை அறிமுகம் - அமைச்சர்கள் பங்கேற்பு!

உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழாவில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்பனா ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏழாவது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை அறிமுக விழா மற்றும் ஏழாவது ஆசிய ஹாக்கி போட்டியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.



பின்னர் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர் மாணவர்களின் சீர்மிகு அணிவகுப்பு செய்து காண்பிக்கபட்டது.



இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லட்சுமணன், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டல தலைவர் இலா.பத்மநாபன் மற்றும் திருப்பூர் மாவட்ட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...