மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து, தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மணிப்பூரில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை, கண்டித்து தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மண்டல துணை அமைப்பாளர் ஒண்டிவீரன் கூறியதாவது, பிரதமராக இருக்க மோடிக்கு தகுதி இல்லை. லட்ச கணக்கில் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடிய வில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்கிறார்.

மணிப்பூரில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றி மவுனம் காப்பது ஏன். மணிப்பூர் பெண்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க தவறிய மணிப்பூர் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், ஒரு மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி உடனடியாக பதவி விலக வேண்டும். என கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் காளிமுத்து, தாராபுரம் நகர செயலாளர் தண்டபாணி, மண்டல துணை அமைப்பாளர் ஒண்டி வீரன், மண்டல மாணவர் அணி செயலாளர் விடியல் தில்லை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...