கோவையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் - மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது!

மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் 9 பேர் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தல்‌ இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ மாமன்ற‌ கூடத்தில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த மறைமுக தேர்தலில்‌ வார்டு எண்‌.7, 9, 17, 38, 39, 43, 44, 47, 48, 56, 74, 75, 78, 85, 86, 90, 91, 95, 96, 97, 98 மற்றும்‌ 99 ஆகிய 22 மாமன்ற உறுப்பினர்கள்‌ தவிர 78 மாமன்ற உறுப்பினர்கள்‌ வருகை புரிந்தனர்‌. வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு 10 மாமன்ற உறுப்பினர்கள்‌ வேட்பு மனு தாக்கல்‌ செய்தனர்‌.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு போட்டியிட்ட 10 வேட்பாளர்களில்‌

வார்டு எண் 1 - ஆர்.கற்பகம்

வார்டு எண் 37 - குமுதம்

வார்டு எண் 69 - சரவணக்குமார்

வார்டு எண் 41 - கே.சாந்தி

வார்டு எண் 83 - வி.சுமா

வார்டு எண் 58 - சுமித்ரா

வார்டு எண் 45 - பேபிசுதா

வார்டு எண் 6 - பொன்னுசாமி

வார்டு எண் 76 - ராஜ்குமார்

ஆகிய 9 வேட்பாளர்கள்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்‌.



எனவே, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்‌.



இந்நிகழ்வில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌ அவர்கள்‌, மண்டல குழு தலைவர்கள்‌, மாமன்ற உறுப்பின்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...