திருப்பூரில் இரவில் பூத்த பிரம்ம கமல பூக்கள் - பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு!

திருமுருகன்பூண்டி அடுத்த தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன் என்பவரது வீட்டில் பூத்துள்ள நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.



திருப்பூர்: திருமுருகன்பூண்டி அருகே பூத்துள்ள பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன்.



இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டில் இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்ம கமல பூக்கள் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளது.



இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர்.



அதனை தொடர்ந்து பூக்களுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபாடு செய்தனர்.



மேலும், குழந்தை இல்லாதவர்கள் மருத்துவ குணம் நிறைந்த இந்த பூவை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் இந்த பூக்களை சாப்பிட்டனர்.



தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த பூக்களை வந்து பார்த்து சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...