தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம்

கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப்போக்கு காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை நீலாம்பூர் பகுதியில் ராயல் ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி ஒன்றிய வட்டாரா வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் என்பவர், சளி தொந்தரவு காரணமாக கடந்த செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வியாழக்கிழமை வீடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென, வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் செவிலியர்களுக்கு தகவல் அளித்தும், அரை மணி நேரத்திற்கு மேலாகியும், மருத்துவர்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர், வந்த மருத்துவர்கள் நோயாளியை தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்ததாகவும், மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது உறவினர் கூறுகையில், மூச்சு தினறல் ஏற்பட்டது குறித்து தகவல் அளித்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மருத்துவர்களோ செவிலியர்களோ யாரும் வந்து பார்க்க வில்லை. பின்னர் வந்த மருத்துவர்களும் நோயாளிக்கு ஆக்சிஜன் கூட வைக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், மருத்துவமனையில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, அவரது உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவ நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து மருத்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...