சூலூர் அருகே பாரதியார் பல்கலை பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கியதாக புகார்!

சூலூர் அருகே செயல்பட்டு வரும் மஹி கலாசேத்ரா என்ற பரதநாட்டிய பள்ளி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய படிப்புக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கியதாக மாணவி ஒருவரின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: சூலூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பரதநாட்டிய பள்ளி, பாரதியார் பல்கலையின் பெயரை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.



கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் மஹி கலாசேத்ரா என்ற பெயரில் பரதநாட்டிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாண்டுகள் டிப்ளமோ, இளங்கலை மற்றும் இரண்டு ஆண்டுகள் முதுகலை பரதநாட்டிய பட்டய படிப்புகள் பாரதியார் பல்கலை அங்கீகாரத்துடன் நடத்தப்படுவதாக நாட்டிய பள்ளி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.



இதனை நம்பி பலர் இந்த பரதநாட்டிய பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் கோவை கணியூரை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகளும் இங்கு நாட்டியத்தில் டிப்ளமோ முடித்த நிலையில் அரங்கேற்றம் செய்ய நாட்டிய பள்ளி நிர்வாகம் 3 லட்ச ரூபாய் வாங்கியதாக சொல்லப்படுகிறது.



இந்த நிலையில் இன்று மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நாட்டிய பள்ளியை முற்றுகையிட்டு, திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.



தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், மாணவியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் மாணவியின் தந்தை சக்திவேல் பேசியதாவது,



பரதநாட்டியத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக எனது மகளை இந்த பள்ளியில் சேர்த்தேன்‌. பட்டய படிப்பு என்ற பெயரில் 3 செமஸ்டர் தேர்வுகள் நடத்தி பாரதியார் பல்கலைக்கழக பெயருடன் சான்றிதழ்கள் கொடுத்திருக்கின்றனர்‌.

இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழகத்தை அணுகி கேட்டபோது, 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற பட்டய படிப்புகளுக்கு பாரதியார் பல்கலை சார்பில் அனுமதி அளிக்கவில்லை.

இதுகுறித்து நாட்டிய பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் எந்த விதம் முறையான பதிலும் தெரிவிக்கவில்லை. அரங்கேற்றத்துக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போதும் அதை கொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே எனது மகளுக்கு நீதி கேட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம். இதுகுறித்து போலீசிலும் புகார் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...