தாராபுரம் அருகே மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மையங்களில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு!

தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட முகாம்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.



இந்த மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.



விண்ணப்ப பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கூறியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தற்போது நடைபெற்று வரும் முகாம்களுக்கு விண்ணப்பபடிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஒவ்வொரு வீடுகளுககும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 2,86,631 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2ஆம் கட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் வருகிற 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நகராட்சி மற்றும் 15 பேரூராட்சிகளிலும் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், நஞ்சியம்பாளையம் ஊராட்சி, குப்பிச்சிபாளையம் நியாயவிலைக்கடை, நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், தொப்பம்பட்டி ஊராட்சி வரப்பாளையம் சமுதாய நலக்கூடம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி, வேங்கிபாளையம் அங்கன்வாடி மையம், கண்ணாங்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகம், மூலனூர் ஊராட்சி ஒன்றியம். பொன்னிவாடி ஊராட்சி எலுக்காம்வலசு.

கிளாங்குண்டல் ஊராட்சி பட்டுத்துறை, குமாரபாளையம் ஊராட்சி தம்மங்கரை, கோட்டைமருதூர் ஊராட்சி பிச்சைக்கல்பட்டி, கம்பளியம்பட்டி, தூரம்பாடி ஊராட்சி நத்தப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மையத்தை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தாராபுரம் ஆர்.டி.ஓ செந்தில் அரசன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தன செந்தில்குமார். தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...