தென்னை வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம்!

தென்னை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 முதல் 31ஆம் தேதி வரை 31 கிராமங்களில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றால் தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாகவும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அறிவித்துள்ளது.



திருப்பூர்: தென்னை வியாபாரிகளை பாதுகாக்க கோரி ஆகஸ்டு மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அறிவித்துள்ளது

இதுதொடர்பாக திருப்பூர் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏர்முனை இளைஞர் அணியின் செயல் தலைவர் வெற்றி கூறியதாவது,

தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டர் விவசாய நிலங்களில் தென்னை மரங்கள் வைத்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய வகையில் தமிழக அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை 140 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். ரேஷன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயில் வழங்குவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

35 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ளதை நீக்கி கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 31 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 31 கிராமங்களிலும் தினந்தோறும் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...