வால்பாறை அருகே நீர்தேக்க தொட்டியில் கடமான் விழுந்து பலி!

அக்காமலை பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடமானின் உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்து உடலை புதைத்தனர். மேலும் மற்ற விலங்குகள் துரத்தியதால், கடமான் தவறி விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதியில் நீர்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை பகுதியில் நீர்தேக்க தொட்டி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வரும் ஆறு கருமலை எஸ்டேட் பகுதியில் நீர் தேக்கப்பட்டு குடிநீராக வால்பாறை பகுதிக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நீர்த்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தண்ணிரில் விழுந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாக 12 வார்டு உறுப்பினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது,

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் நீர்தேக்க தொட்டி அருகே சென்று பார்த்தபோது கடமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. மேலும் வால்பாறை நகராட்சி பொறியாளர் தலைமையில்.



தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தீ அணைப்பு துறையினர் தண்ணீரில் சென்று கடமானின் உடலில் கயிறு கட்டி தண்ணீரில் இருந்து உடலை மீட்டனர்.

வனப்பகுதி அருகே செந்நாய் மற்றும் சிறுத்தைகள் கட மானை வேட்டையாட துரத்திச் செல்லும் பொழுது தண்ணீரில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் கட மானின் வயது 5 இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த கடமானை உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...