கே.எஸ்.அழகிரி விரைவில் குணமடைய வேண்டி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு பூஜை!

சமீபத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது நிலை தடுமாறி விழுந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி குணமடைய வேண்டி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.



கோவை: காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குணமடைய வேண்டி கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இரு தினங்களுக்கு முன்பு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கோவையில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் பாலாபிஷேகம், உள்ளிட்ட பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர் செந்தில் குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...